GuidePedia

0




v0383நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­தலில் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் இணைந்து மட்­டக்­க­ளப்பு மற்றும் திரு­கோ­ண­மலை ஆகிய மாவட்­டங்­களில் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் தனித்து மரச்­சின்­னத்தில் போட்­டி­யி­டு­கி­றது. திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து யானைச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­கி­றது.
இந்­நி­லை­யி­லேயே நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­சுக்­கு­மி­டையில்  எட்­டப்­பட்­டுள்ள இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் ந.தே. முன்­னணி சார்பில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஒரு வேட்­பா­ளரும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் ஒரு வேட்­பா­ளரும் மு.கா. பட்­டி­யலில் போட்­டி­யி­ட­வுள்­ளனர்.
இதற்­க­மைய மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் தவி­சாளர் பொறி­யி­ய­லாளர் எம்.எம்.அப்துர் ரஹ்­மானும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் ந.தே.முன்­ன­ணியின் தலை­மைத்­துவ சபை உறுப்­பினர் டாக்டர் ஸாஹிரும் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக அறிய முடி­கி­றது.
இது தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு இன்றைய தினம் மு.கா. தலைமையகமான தாருஸ் ஸலாமில் நடைபெறவுள்ள விசேட செய்தியாளர் மாநாட்டில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 -Vidivelli-

Post a Comment

 
Top