GuidePedia

0


எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG ) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இன்று பிற்பகல் கொழும்பில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்சலாத்தில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தலைவர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

அதற்கமைய நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் உடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தவிசாளார் அப்துல் ரஹ்மான், பொதுச் செயலாளர் நஜா முஹம்மட் உட்பட முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். (ஸ)


Post a Comment

 
Top