GuidePedia

0





கிரிகெட் உலகிலிருந்து ஓய்வு பெற்றதும் இராணுவத்தில் இணைந்து தீவிரமாக பணியாற்ற விரும்புவதாக தோனி தெரிவித்துள்ளார்.

கடந்த 2011ல் இந்தியாவுக்கு ஐ.சி.சி. உலக கோப்பையைப் பெற்றுக்கொடுத்போது இந்திய இராணுவத்தின் மீது இயல்பாகவே ஈர்ப்பு கொண்ட தோனிக்கு, தரைப்படையின் ‘பரசூட் ரெஜிமெண்ட்’ பிரிவு சார்பில் கௌரவ ‘லெப்டினென்ட்’ பதவி வழங்கப்பட்டது.

இலங்கையில் இடம்பெறவுள்ள 3 தொடர்களைத் தொடர்ந்து தென் ஆப்ரிக்க அணிக்கெதிரான நான்கு போட்டிகள் உட்பட மொத்தமாக ஏழு டெஸ்ட் தொடர்கள் நடைபெறவுள்ளன. குறித்த இப்போட்டிகள் முடிவடைந்ததன் பின்னரே ஒரு நாள்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதனால் தோனிக்கு நான்கு மாத ஓய்வு கிடைத்துள்ளது.

தற்போது குடும்பத்துடன் ஓய்வில் உள்ள தோனி விரைவில் இந்திய இராணுவத்தில் இணைந்து பணியாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இராணுவம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது, வீரர்களை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்துவது போன்ற செயல்களில் அவர் ஈடுபடுவார் என்றும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. (ச – மு)

Post a Comment

 
Top