GuidePedia

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சில மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

அதேவேளை மற்றும் சில மாவட்டங்களில் மரச் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கும் தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், கடந்த சில தினங்களாக தமது கட்சியின் உயர்மட்டம் கூடி இந்த தீர்மானத்தை எடுத்ததாக குறிப்பிட்டார். 

அதனடிப்படையில் வன்னி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தனித்து மரச்சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.




Post a Comment

 
Top