GuidePedia

0


வட கொழும்பு, மாதம்பிட்டிய, ஹேனமுல்ல பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர் ஒருவருக்கு பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட குழுவினர் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

நேற்று (10) அதிகாலை 3.30 அளவில் குறித்த நபரின் வீட்டுக்கு சென்ற 15 பேர் கொண்ட குழு இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததாக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுஜீவ சேனசிங்கவின் போஸ்டர் மற்றும் பதாகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் இந்த மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

 
Top