GuidePedia

0


சிலாபம் – நீர்கொழும்பு பிரதான வீதியின் வத்தேகட அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மாதம்பை பகுதியை சேர்ந்த 52 வயதான நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

வித்தில் காயமடைந்த இரு பெண்களும் மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் கும்புறுமூலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று, கும்புறுமூலை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் குடைசாய்ந்து நேற்று இரவு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதியும், பெண்ணொருவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Post a Comment

 
Top