GuidePedia

0


இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முழுமையாக ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக குமார் சங்ககாரா அறிவித்துள்ளார்.

இறுதியாக நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளோடு தனது ஓய்வை குமார் சங்ககாரா அறிவித்த போதும், விளையாட்டுத் துறை அமைச்சர், அணித்தலைவர் மெத்யூஸ் மற்றும் சில கிரிகெட் வாரிய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஒருநாள் போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெற்ற சங்ககாரா, டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாட முடிவு செய்தார்.

அதற்கமைய பாகிஸ்தானுக்கு எதிராக இடம்பெறுகின்ற 2 டெஸ்ட் மற்றும் இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடப் போவதாக சங்ககாரா அறிவித்திருந்தார். 


மேலும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி, தான் விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டியாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போகும் சங்கக்காராவை சிறந்த முறையில் வழியனுப்பி வைக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. 


அத்துடன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான முழுத் தொடரிலும் சங்ககாரவை விளையாட வைக்க முயற்சி செய்து வருவதாகவும் செய்திகள் தெரிவிகின்றன

Post a Comment

 
Top