GuidePedia

0



முல்லைத்தீவு, விசுவமடு குளத்தில் நீராடச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த இரண்டு மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்திருந்ததாக தர்மபுரம் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இந்த அனர்த்தம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதான இரண்டு மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் கூறினர்.

Post a Comment

 
Top